சிவகார்த்திகேயனுக்காக பாட்டுப் பாடிய பிரபலம்! சிவாவின் க்யூட் ரியாக்சனைப் பாருங்க…

   இளவயது, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சகலதரப்பிலும் மிகப்பெரிய ரசிகர் படையை வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் வாழ்வைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். விஜய் டிவி அவரது வாழ்க்கைக் கேரியரில் மிகப்பெரிய லிப்டைக் கொடுத்தது என்று சொல்லலாம். 

       சிவகார்த்திகேயனின் இந்த முன்னேற்றத்துக்கு அவரது விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுமே காரணம். சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தைத் தொடர்ந்து தற்போது டாக்டர் என்ற படத்தில் நடித்தார். அந்தப்படம் மெகா ஹிட்டானது. தொடர்ந்து, இப்போது சக்கரவர்த்தி இயக்கத்தில் அவர் நடித்த டான் திரைப்படமும் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. வசூலிலும் இந்த படம் சக்கரவர்த்தியாக அசத்துகிறது.

  சிவகார்த்திகேயன் இடையில் சில சொந்தப் படங்களை எடுத்து ரொம்பவே கையை சுட்டுக்கொண்டார். மீண்டும் இப்போது சினிமா நடிப்பிலேயே அவர் முழுக்கவனமும் செலுத்தி வருவது அவரது ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. சிவாவுக்கு ஏற்கனவே ஆராதனா என்னும் மகள் உண்டு. இப்போது அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. தன் இரண்டாவது மகனுக்கு குகன் தாஸ் என பெயர் சூட்டினார். 

  சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொள்ள சிவகார்த்திகேயன் சென்றிருந்தார். அப்போது அவருக்காக உலகப்புகழ் பெற்ற பாடகர் அப்துல் சர்மா பாடல் ஒன்றை பாடிக் காட்டினார். அதை மனம் உருகி சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டே இருந்தார். அதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.