குட்டிக்குழந்தையைத் தூங்க வைக்க சூப்பர் சிங்கர் ரிஹானா பாடிய பாடல்..!

     பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சி தமிழகத்தின் பட்டிதொடியெங்கும் பேமஸ். இதிலும் ஜீனியர், சீனியர் எனத் தனித்தனிப் பிரிவில் நடக்கும் இந்த நிகழ்ச்சி திறமைசாலிகளையும் அடையாளம்காட்டி வருகிறது. 

   ஜூனியர் பிரிவில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கியவர் ரிஹானா. அதிலும் இந்த குட்டித்தேவதையின் துள்ளலான முகபாவனைக்கே பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த ரியாலிட்டி ஷோவை ம.கா.ப.ஆனந்த், மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர். 

  இந்த நிகழ்ச்சியில் சித்ரா, உன்னிகிருஷ்ணன் என பிரபலங்கள் நடுவராக இருப்பது இன்னும் பிளஸாக அமைந்துள்ளது. இந்த சூப்பர் சிங்கர் ஜூனியரில் போட்டியாளராக இருக்கும் ரிஹானா ஒரு குட்டிக்குழந்தையைத் தூங்க வைக்க மனம் உருகி, கற்பூர முல்லை ஒன்று பாடலை பாடும் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சிகளப் பாருங்கள்.