உங்களுக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் என தெரிய வேண்டுமா? கை ரேகை வைத்தே தெரிஞ்சுக்க சூப்பர் டிப்ஸ்..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. ஆனால் அன்றும், இன்றும் இதில் பெரும் சிக்கலாக இருப்பதே நல்ல வரன் கிடைப்பதுதான். சிலருக்கு எல்லா வசதியும் இருக்கும். கைநிறைய சம்பாதிப்பார்கள். ஆனாலும் திருமணம் தள்ளிக்கொண்டே போகும். இதற்கு நமது திருமண ரேகையே காரணம். நம் கைகளில் இருக்கும் முக்கியமான கோடுகளில் திருமண ரேகையும் ஒன்று.

இந்த கோட்டில் தான் நம் திருமணம் பற்றிய ரகசியங்கள் ஒளிந்துள்ளது. அதாவது இதய கோட்டிற்கும் சுண்டு விரலுக்கும் இடையில் இருக்கும் கோடுதான் திருமண ரேகை. இந்த கோடு உங்களின் இதய கோட்டிற்கும், சுண்டுவிரலுக்கும் இடையில் இருந்தால் 25 வயதில் திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம் இந்த ரேகை, இதயகோட்டிற்கு பக்கத்தில் இருந்தால் விரைவிலேயே டும்..டும்..டும் இருக்கும் என அர்த்தம்.

இந்த ரேகை இதய கோட்டில் இருந்து விலகி, சுண்டு விரலுக்கு அடியில் இருந்தால் திருமணம் தாமதமாகவே நடக்கும். அதேபோல் ஒன்றுக்கு அதிகமான தீர்க்கமான திருமண ரேகை இருந்தால் பல திருமணங்கள் நடக்கும். இரண்டு நீளமான திருமண ரேகைகள் இருந்தும், ஒன்று மிக நீளமாகவும், இன்னொன்று சின்னதாகவும் இருந்தால் அந்த நீளமான கோடு உங்களின் திருமண வாழ்க்கையையும், சின்ன கோடு உங்களின் முறிந்த உறவைக் குறிக்கும்.

இரண்டு கோடுகள் ஒன்றுக்கொன்று அருகில் அதுவும் தீர்க்கமாக இருந்தால் உங்களுக்கு இரு திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம். இதேபோல் நமது கைரேகையில் பிற கோடுகளை விட, திருமண கோடு நீளமாகக் இருந்தால் சாதி மாறி திருமணம் செய்யும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அர்த்தம்.