அடிக்குற வெயிலுக்கு பறவைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் அந்த மனசு இருக்கே.. முதியவருக்கு குவியும் பாராட்டு..!

        மனிதர்கள் பலவிதம் இருப்பார்கள். பொதுவாகவே மனிதர்களில் சிலர் எப்போதுமே கருணை உள்ளத்துடனே இருப்பார்கள். சக மனிதர்களையும் தாண்டி ஜீவராசிகளின் மீது அவர்கள் பேரன்பைச் செலுத்துவார்கள். அப்படியான  ஒரு தாத்தாவின் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

  அப்படி அவர் என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா? தன் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருக்கிறார் அந்த தாத்தா. பொதுவாக மனிதர்களாகிய நாம் நமக்குத் தாகம் என்றால் யாரிடமாவது தண்ணீர் வாங்கிக் குடித்து விடுவோம். அல்லது நாமே கையில் பாட்டில் வைத்திருப்போம். வீட்டில் இருந்தால், வீட்டில் தண்ணீர் இருக்கும். ஆனால் பறவைகள் தண்ணீருக்காக மட்டுமே வெகுதூரம் பறக்க வேண்டி இருக்கும். இதை ஆழமாக உள்வாங்கியிருக்கும் அந்தத் தாத்தா, தன் வீட்டு வாசலில் சேரில் இருந்தபடியே ஒரு ட்யூப் பைப்பில் தண்ணீரை பீய்ச்சுகிறார்.

  அவர் அப்படி பீய்ச்சிக் கொண்டிருக்கும்போதே பறவைகள் பறந்துவந்து தண்ணீரைக் குடிப்பதும், கும்மாளம் போடுவதுமாக இருக்கிறது. சில பறவைகள் தண்ணீரைக் குடிப்பதும், குளிப்பதுமாக மிகவும் உற்சாகமாக இருக்கின்றன. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.