கவிஞர் கண்ணதாசனின் மகளா இது.. இப்போது என்ன செய்கிறார் தெரியுமா..?

  கவிஞர் கண்ணதாசனுக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. அவர் எழுதிய பாடல்கள் இன்னும்கூட பொக்கிஷமாக இருக்கிறது. 4000க்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கும் கண்ணதாசனின் சினிமா பங்களிப்பும் அதிகம்.

  சண்டமாருதம்,திருமகள், திரை ஒலி, தென்றல் திரை, கண்ணதாசன், முல்லை ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பங்களிப்பு செய்துள்ளார். 1980 ஆம் ஆண்டு இவரது எழுத்துத்திறனுகாக மத்திய அரசின் இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் இருந்த கண்ணதாஸாண், 1951 ஆம் ஆண்டு பார்வதி என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார், 

  இந்த தம்பதிக்கு 5 மகன்களும், இருமகள்களும் உள்ளனர். இதில் கலைச்செல்வி என்னும் மகள் கண்ணதாசன் பெயரிலேயே மெஸ் ஒன்றை நடத்திவருகிறார். அவர் தன் சைவ உணவகத்தில் இருந்து தன் தந்தையின் நினைவுகள் குறித்துப் பேசும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.